;
Athirady Tamil News

இந்தியாவில் மேலும் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 132 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 101 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,843 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 23 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் தொடர்ந்து 2-வது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,750 ஆக நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.