;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓர் எச்சரிக்கை! நூதன முறையில் மோசடி !!

0

சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு புதிய மோசடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.

அதாவது, வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறும் ஒருவர், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து யாரோ பணம் எடுத்துள்ளார்கள் என்னும் செய்தியை வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றனர்.

அந்த நபரின் பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வங்கி அட்டை ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் வங்கி அட்டையைக் கையளிக்கவேண்டும் என்றும் கேட்கின்றனர். அத்துடன், PIN எண்ணையும் அவர்கள் கேட்கின்றனர்.

இந்த விடயம் காவல்துறையினருக்கு போய்விடக்கூடாது என்பதற்காக, தாங்களே காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டதாகவும் குறித்த மோசடிக்காரர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுவிஸ்லாந்து காவல்துறையினர் தெரிவிக்கையில், இப்படி ஒரு மோசடி சுவிட்சர்லாந்தில் தலைகாட்டத் துவங்கியுள்ளது. யாரிடமும் தங்கள் வங்கி அட்டையைக் கொடுக்கவேண்டாம் என்றும், தங்கள் PIN எண்ணை யாரிடமும் தெரிவிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், வங்கியோ, காவல்துறையினரோ, அவற்றைக் கேட்பதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.