;
Athirady Tamil News

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

0

அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

மார்ச் 4-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.