;
Athirady Tamil News

உக்ரைன் மீது கப்பல், ஏவுகணை மூலம் தாக்குதல்!!

0

உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா கப்பல் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. 36 போர்கப்பல்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகள் மூலமாக தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதில் 16ஐ உக்ரைன் விமான படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலில் 79வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். லிவிவ் மாகாணத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் வௌியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.