;
Athirady Tamil News

கராச்சி காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் பலி!!

0

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் காவல் நிலையத்தை கைப்பற்ற முயற்சித்தனர். காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 4 போலீசாரும் உயிரிழந்தனர். பல மணிநேர சண்டைக்கு பின் போலீஸ் அலுவலகத்தை போலீசார் மீட்டனர். காவல்துறை தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.