;
Athirady Tamil News

சங்கர வித்யாஸ்ரம் பள்ளியில் தண்ணீர் திருவிழா!!

0

புதுவை ஒதியம்பட்டில் அமைந்துள்ள சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கரஹாரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து நீர்குடம் சுமந்து சங்கர வித்யாஸ்ரம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நீர்குடத்தை வரவேற்று கொண்டாடினர்.

நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சவுந்தரி தொகுத்து வழங்கினார். புதுவை அரபிந்தோ சொசைட்டியின் மருத்துவ மற்றும் மனநல பணியாளர் அருண்பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முடிவில் தண்ணீர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள்உறுதிமொழி ஏற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.