;
Athirady Tamil News

திருமண விழாவில் கைத்துப்பாக்கியால் விருந்தினர்களை மிரட்டிய ஆன்மிகவாதியின் சகோதரர்!!

0

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இந்த கோவிலுக்கு சமீபத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பா.ஜனதா மாநில தலைவர் சர்மா உள்பட பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர்.

இந்நிலையில் இவரது இளைய சகோதரரான சவுரப் என்ற ஷாலிகிராம்( வயது 26) என்பவரும் தற்போது ஒரு வீடியோவால் பரபரப்பாக பேசப்படுகிறார். சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த சவுரப் கையில் நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு விருந்தினர்களை மிரட்டுவது போன்றும், கையில் சிகரெட்டை புகைத்தவாறும் வீடியோவில் காட்சியளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சத்தர்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் சவுரப் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.