;
Athirady Tamil News

கல்வி கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் !!

0

எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவிக்கின்றார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 160 பாடசாலைகள் உள்வாங்கப்படும்.

பாடத்திட்டம், கல்வி கற்பிக்கும் முறை மற்றும் பரீட்சை முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

21ம் நூற்றாண்டில் உலகத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை மாற்றுவதே தமது நோக்கம் என அவர் கூறுகின்றார்.

பரீட்சைகளில் மாத்திரம் மாணவர்களின் அறிவை ஆராயும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கல்வி முறையின் ஊடாக, செயல் திறனான ஒருவர் உருவாக மாட்டார் என அவர் மேலும் கூறுகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.