;
Athirady Tamil News

கிரிந்திவெல விபத்தில் இருவர் பலி !!

0

கிரிந்திவெல தெல்கொட பிரதான வீதியின் புதுபகலை கிராமிய வங்கிக்கு அருகில் சிறிய வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஆணும் பின் இருக்கையில் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் என தொம்பே பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகன ரதவான பிரதேசத்தில் வசித்து வந்த 42 வயதான சந்தன ராஜபக்ஷ மற்றும் நாற்பத்தைந்து வயதுடைய பிரபோதா நயானி என்ற பெண்ணுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.