;
Athirady Tamil News

வெள்ளை மாளிகைக்கு வாங்க.. இங்கிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்!!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை வெளியிடுவது தொடர்பாக பங்கேற்றனர்.

அங்கு, அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் சேர்ந்து மூன்று நாடுகளின் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா) கூட்டணியின் ஒரு பகுதியாக தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்-தொழில்நுட்ப-பகிர்வு திட்டங்களை வெளியிட்டனர். இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வலுவான நீடித்த பொருளாதார உறவைத் தொடர்ந்து ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபரும் பிரதமரும் விவாதித்தனர். அப்போது, இந்த உரையாடலைத் தொடர்ந்து ஜூன் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரதமர் சுனக்கிற்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.