;
Athirady Tamil News

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

0

மார்ச் மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

அதன்படி மார்ச் மாதத்தில் இதுவரை மொத்தம் 12,762 ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலா பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,937 சுற்றுலா பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 2,716 சுற்றுலா பயணிகளும் இம் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.