;
Athirady Tamil News

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த கூவம் ஆற்றில் தூய்மை பணி!!

0

சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீர்நிலைப் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள கூவம் ஆறு மற்றும் ராயபுரம் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் அதிகமாக படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் படகுகள் மற்றும் நவீன எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:- நீர்நிலைகளில் வளரும் ஆகாயத்தாமரைகளால் கொசு உற்பத்தி அதிகமாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நீர்நிலைகளில் வலைகள் அமைக்கப்பட்டு ஆகாயத் தாமரைகள் தடுக்கப்படுகிறது. ஆம்பியன் எந்திரங்கள் மூலம் அவை வேரோடு அகற்றப்பட்டு கொசு உற்பத்தியாகாத வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.