;
Athirady Tamil News

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு: 1½ மணி நேரத்தில் 6 லட்சம் டிக்கெட்டுகள் தீர்ந்தன!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய ஒவ்வொரு மாதமும் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்க்கான ரூ 300 டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 6 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் பலர் முன்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது. தொடர்ந்து முன்பதிவு செய்துகொண்டே இருந்தனர். தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட 1½ மணி நேரத்திற்குள் 6 லட்சம் டிக்கட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.