;
Athirady Tamil News

ரஷ்யாவில் உளவு பார்த்த அமெரிக்க செய்தியாளர் – ரஷ்யா எடுக்கவுள்ள நடவடிக்கை!

0

அமெரிக்கச் செய்தியாளரான 31 வயதையுடைய எவன் கெர்ஷ்கோவிச் என்பவர் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Wall Street Journal நிறுவன செய்தியாளரான எவன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

சட்ட அமலாக்கத் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரஷ்ய குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஆயுத உற்பத்திக் கூடத்திலிருந்து இரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றதாக கடந்த வாரம் ரஷ்யா செய்தியாளர் எவனைக் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் உளவு பார்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

மாஸ்கோ நீதிமன்றத்தில் இது தொடர்பிலான விசாரணை இந்த மாத இறுதியில் நடத்தப்படவுள்ளது.

தமது ஊழியர் உளவு பார்த்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை Wall Street Journal நிராகரித்துள்ளதுடன், அமெரிக்காவும் இதனை மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.