;
Athirady Tamil News

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி மோசடி !!

0

ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி பணத்தை மோசடி செய்த நபர், 15 ஏடிஎம்அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுக்க வந்த சிலருக்கு உதவி செய்வதாகக் கூறி அவர்களின் இரகசிய இலக்கத்தை பெற்று குறித்த சந்தேக நபர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த நபர்களிடம் பணத்துடன் போலி அட்டையை கொடுத்து சரியான அட்டையை தம்வசம் வைத்திருந்து பின்னர் பணத்தை எடுத்து சென்றது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான, மஹரகம உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற 50 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.