;
Athirady Tamil News

நிலச்சரிவில் புதைந்த லாரிகள்: இருவர் பலி- 8 பேர் படுகாயம்!!

0

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கி ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சில லாரிகளில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.