;
Athirady Tamil News

கேரள மாநிலம் இடுக்கி அருகே வேன் கவிழ்ந்து விபத்து- தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு !!

0

தமிழகம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இடுக்கி அருகே பூப்பாறை தொண்டிமலை பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் 24 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 8 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தில் நெல்லையைச் சேர்ந்த பெருமாள், வள்ளியம்மாள், சுசீந்திரன் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.