;
Athirady Tamil News

மறைந்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நேரில் வருகை !!

0

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95), சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரகாஷ் சிங் பாதலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 12 மணியளவில் சண்டிகர் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.