;
Athirady Tamil News

கொவிட் தடுப்பூசியை முழுமையாக பெறாதோருக்கான விசேட அறிவிப்பு!!

0

நாட்டில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தாதோருக்காகச் சுகாதார அதிகாரிகள் விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளனர்.

அந்த அறிவிப்பில் அவர்கள், முழுமையான கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களின் இருந்து சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளனர்.

தடுப்பூசி அளவுகளை முழுமையாக பெறாத 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எவரும் குறித்த கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.