;
Athirady Tamil News

முடிசூட்டு விழாவில் நடந்த அசம்பாவிதம்!!

0

பிரித்தானியாவில் நடைபெற்ற மன்னர் முடிசூட்டு விழாவில் அணி வகுப்பிலிருந்த குதிரை திமிறியதால், நடந்த அசம்பாவிதத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், நேற்று மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.

உலக நாடுகளிலுள்ள அனைவரும் இவ்விழாவை இணையம் மூலம் கண்டு ரசித்து கொண்டாடினர்.

இந்நிகழ்வில் குதிரை அணி வகுப்பு, மூன்றாம் அபேயில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலம் என கோலாகலமாக நடைபெற்றது.

சாலையின் இருபக்கமும் இருந்த மக்கள் மன்னர் சார்லஸ் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவின் போது குதிரை ஒன்று கூட்டத்தை கண்டு பயந்ததனால், திமிறி தன் கட்டுபாட்டை இழந்து அங்கிருந்த கூட்டத்தின் மீது மோதுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பிய சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை ஏற்றிச் சென்ற கோல்ட் ஸ்டேட் கோச்சின் பின்னால், ராஜாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் குதிரை ஏறக்குறைய மோதியுள்ளது. ஆனால் யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் முடிசூட்டு விழாவில் நடைபெற்ற இச்சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.