;
Athirady Tamil News

சிறுநீரை வீசியவர்: தள்ளாடிய போது சிக்கினார் !!

0

திவுலப்பிட்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சாரதியின் மீது, மினுவாங்கொடை பஸ் நிலையத்தின் வைத்து, ப்ளாஸ்டிக் போத்தலில் சிறுநீரைப் பிடித்து தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

, தனியார் பஸ்ஸை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறிப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு, கரையோர பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு, எதிர்வரும் 9ஆம் திகதியன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்ட கரையோர பொலிஸார், அவரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.