;
Athirady Tamil News

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக பொதுக்கூட்டம்- ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி!!

0

கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு செய்தோம். எங்கள் மனுவை நிராகரித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். அதை ரத்து செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என கூறியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரூர் திருவள்ளுவர் அரங்கில் பொதுக்கூட்டங்களுக்கோ வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை, விளையாட்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜூலை 1ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மனுதாரரின் மனு உரிய காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நிதிபதி, மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.