;
Athirady Tamil News

ஐ.டி.ஐ. மாணவர் தூக்கிட்டு தற்கொலை!!

0

திருபுவனை அருகே திருவண்டார் கோவில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசிப்பவர் தன செல்வி. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தன செல்வி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மகள் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். மகன் தரணிதரன் (17). எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று நெட்டப்பாக்கம் அரசு ஐ.டி.ஐ. பள்ளியில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித் துள்ளார். இந்த நிலையில் தரணி தரன் செல்போனில் எப்போதும் விளையாடிக்கொ ண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் அந்த செல்போனை தரையில் வீசி உடைத்து விட்டார். தன செல்வியும் அவரது மகளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த தரணிதரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார்.

பணிமுடிந்து வீடு திரும்பிய தனசெல்வி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தரணிதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தன செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போ னில் விளையா டியதை தாய் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.