;
Athirady Tamil News

யாழில் விபத்தில் சிக்கி நுவரெலியா மாணவன் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும் , பிறிதொரு வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.