;
Athirady Tamil News

சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0

எட்டு வயது சிறுமியொருவர் சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமியை வீட்டுப பணியாளராக இருந்த ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்த தாய் சிறுமியை காணாததை அடுத்து உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார். இதன்போது வீட்டு வளாகத்தில் சூட்கேஸ் ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.