;
Athirady Tamil News

பா.ஜனதா சார்பில் உறுதி மொழி ஏற்பு!!

0

இந்தியா முழுவதும் 76 -ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி தலைமையில் என் மண் என் தேசம் என்ற நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அன்னை சிவகாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் மரம் நடுவிழா மற்றும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து பா.ஜனதா இளைஞரணி சார்பில் புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்துதல் மற்றும் அனைத்து பகுதிகளிலிருந்து மண் சேகரிக்கப்பட்டு புதுடெல்லியில் அமையவி ருக்கும் நினைவுச் சின்னத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் அசோக் பாபு எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் மாநில துணைத்தலைவர்கள், செல்வம், முருகன் மாநில செயலாளர், அகிலன் கூட்டுறவு பிரிவின் அமைப்பாளர், வெற்றிச்செல்வம் ,வல்லுனர் பிரிவு தலைவர் ரமேஷ் , மாநில இளைஞரணி துணைத் தலைவர் சபரகிரிசன், மாநில பொதுச் செயலாளர், அமல்ராஜ்மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ராஜ்குமார், சுரேஷ், வெங்கட்ரா மன், வேல்முருகன், வாசுகி, நெல்லித்தோப்பு இளைஞ ரணி தொகுதி தலைவர் மகேந்திரன், உப்பளம் தொகுதி தலைவர் பார் புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞரணி நகர மாவட்ட தலைவர் பாலகுரு செய்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.