;
Athirady Tamil News

காவிரி நீரை தடுக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு புதுவை அ.தி.மு.க. கண்டனம்!!

0

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என பேசிய கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை காலில் போட்டு மிதித்து கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி தமிழகம்-புதுவைக்கு வரவேண்டிய காவிரி நீரை தடுத்து வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். காவிரி நீர் குறித்து கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை கேட்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இதனால் காரைக்கால் கடைமடை பகுதி விவசாய மக்களும் பாதிக்கப்படு கின்றனர். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. இணை செயலாளர் கணேசன் உடனிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.