;
Athirady Tamil News

பங்களாதேஷில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள் !!

0

பங்களாதேஷில் பறவைகள் மோதியதை அடுத்து இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியதால் விமானத்தின் ஒரு டயர் வெடித்த நிலையிலேயே உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.

அதேபோன்று மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அந்த விமானமும் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு விமானங்களின் பயணமும் இரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.