;
Athirady Tamil News

காலி சிறைச்சாலையில் மர்ம தொற்று! உயிரிழக்கும் கைதிகள் !!

0

காலி சிறைச்சாலையில் மர்ம நோய்த்தொற்றால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், நோய்த்தொற்றை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.