;
Athirady Tamil News

ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் அரசாங்கத்துக்குள்?

0

அரசாங்கத்துக்குள் ஈஸ்டர் ஞாயிறு சூத்திரதாரிகள் உள்ளனரா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பேராயர் பேசுகையில் அவரை அவமதிக்கும் வகையில் அரசாங்கத்தினர் செயற்படுகின்றனர் என்றும் உடனடியாக வெளிப்படையான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பக்கச்சார்பற்ற, நியாயமான விசாரணையை நடத்துமாறு தொடர்ச்சியாக நாங்கள் கோரிக்கைகள் முன்வைத்து வந்தோம். இந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த தாக்குதலை எப்போதும் அனைவரும் கண்டிக்கின்றனர். இந்த

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்பதனை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது பாரதூரமான விடயமே. இந்த தாக்குதலில் இறந்த மக்களுக்கு நீதி, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.

அவ்வாறு கூறியே இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டது. இவ்வாறு கூறிவந்த அரசாங்கம் இந்த தாக்குதலின் பங்குதாரர்களா? இதன் உண்மைகளை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவாத, மதவாத தாக்குதல்கள் நினைவுள்ளதா? அதனை காட்டிதானே ஜனாதிபதி, பிரதமர் ஆசனங்களுக்கு வந்தார்கள். தேசிய ஐக்கியத்தை சீரழித்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். இவர்களால் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மைகளை வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறான நிலைமையில் தாக்குதலின் உண்மைகளை தேட சர்வதேசம் சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை.

இது தொடர்பில் தெரிவுக் குழுவை அமைப்பதாக கூறுகின்றனர். தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அந்தக் குழுவின் தலைவராக நியமித்துவிடுவார்களோ தெரியவில்லை. இது வெட்கமானது. இறந்த உயிர்களின் மீது இருந்து ஆட்சிக்கு வந்தவர்களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வர முடியவில்லை.

தேசிய விசாரணை தோல்வியடைந்துள்ள இந்த நேரத்தில் இதனை சர்வதேச விசாரணைகளின் மூலமே தீர்க்க முடியும். இரத்த தாகத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்த பிரச்சினையை மூடி மறைக்காது உள்நாடு, சர்வதேசம் இணைந்த வெளிப்படைத்தன்மையுடனான சர்வதேச விசாரணை அவசியமாகும்.

இதன் பிரதான சூத்திரதாரிகள் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனரா? என்பதனை அறிய வேண்டும். நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியில் நிச்சயமாக இதன் உண்மைகளை கண்டறியவும் பிரதான சூத்திரதாரியை கண்டறியவும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!

உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

“இது அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி” !!

எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.