ராஜபக்ஷவுக்கு எதிரான வீடியோ: சனல் 4ஐ சாடுகிறார் கோட்டா!!

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவானது, 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிரசாரம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், இதே தொலைக்காட்சி வெளியிட்ட முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.