;
Athirady Tamil News

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், வவுனியாவில் கரப்பந்தாட்ட போட்டி.. (படங்கள்)

0

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், வவுனியாவில் கரப்பந்தாட்ட போட்டி.. (படங்கள்)
################################

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாஸ்அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திநான்காவது நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “தண்ணீர்ப் பந்தல், சிறுவர் இல்லமொன்றுக்கு உணவு வழங்குதல்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை தோழர் மாணிக்கதாசன் அவர்களின் உறவுகள், நண்பர்கள் வழங்கி வைக்க, வவுனியா மாவட்ட புளொட் தோழர்களில் ஒருவரான தோழர்.சிவாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இதேவேளை புளொட் உபதலைவர் தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திநான்காவது நினைவாண்டு அஞ்சலி சுவரொட்டிகள் வவுனியா நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டு காணப்பட்டு உள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (10.09.2023) காலை எட்டு மணிக்கு வவுனியா Fire Zone விளையாட்டு மைதானத்தில் “புளொட் உபதலைவர் தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவாக” மாபெரும் கரப்பந்தாடடப போட்டி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி “கரப்பந்தாட்டப் போட்டி” நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களான தோழர்.பீற்றர் (தேசிய அமைப்பாளர்) மத்தியகுழு உறுப்பினர்களான தோழர்.மோகன், தோழர்.சூரி, தோழர்.சிவம், உட்பட கழகத் தோழர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக.. புங்கையூரான்.

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.