;
Athirady Tamil News

ரஷ்யாவுக்கு பெரும் தோல்வி! பாதுகாப்பு கட்டமைப்பு தாக்கி அழிப்பு !!

0

கிரிமியாவில் ரஷ்ய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தாக்கி அழிக்கப்பட்டதுடன், 2 போர்க்கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

எஸ் – 400 ‘Triumf’ எனும் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பே தமது சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில்’ அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு கிரிமியாவில் தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 2 போர்க்கப்பல்களை (ரோந்து கப்பல்)கருங்கடலில் தாக்கியதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

இத்தகைய ஆயுத உபகரணங்களை இழப்பது ரஷ்யாவின் “தந்திரோபாய தோல்விகள்” என்று இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பக்முத் அருகே உள்ள ஆண்ட்ரிவ்கா கிராமத்தை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலை ரஷ்யா மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.