;
Athirady Tamil News

பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) பிற்பகல் 3 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.

பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது.

பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.