;
Athirady Tamil News

எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள்!!

0

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர். வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.