;
Athirady Tamil News

வணிக சிலிண்டர் விலை உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0

மத்திய அரசு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் ரூ.203 உயர்த்தியுள்ளன.

முன்னதாக சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,695க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், விலையுயர்வால் தற்போது ரூ.1,898க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி கண்டனம்
இந்த விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில்,

‘வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் – தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும். இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.