;
Athirady Tamil News

பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள் இன்றுடன் நிறைவு!

0

பல்கலைக்கழகங்களுகான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகளுக்கு விண்ணப்பிக்கும் நாட்கள்
2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோன்றியவர்களின் பெறுபேறுகள் கடந்த மாதம் வெளிவந்தது.

இதையடுத்து சித்தியடைந்தவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் பின்னர் நீடிக்கப்படாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் 263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றி அதில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.