;
Athirady Tamil News

பிழைப்பு தேடி வெளிநாடு சென்றவர்… லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

0

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார்.

MEGA7 லொட்டறி
மராட்டிய மாகாணம் மும்பை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். கடந்த 1996ல் பிழைப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார். துபாய் மாகாணத்தில் புதிய வாழ்க்கையை தேடிய அவருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

தற்போது, நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு, நெகிழ்ச்சி திருப்பமாக MEGA7 லொட்டறியில் இரண்டாவது பரிசாக Dh250,000 அள்ளியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை சிறிய தொகைகளை லொட்டறியில் வென்றிருந்தாலும், பெருந்தொகையை பரிசாக வெல்வது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

முதல் பரிசான ரூ.226 கோடி
லொட்டறி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் தமது அன்பு மனைவிக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த தொகையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

MEGA7 லொட்டறியில் முதல் பரிசான ரூ.226 கோடியை இதுவரை தனியாகவோ, குழுவாகவோ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்களில் எவரும் வென்றதில்லை என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.