;
Athirady Tamil News

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து, 40 பேர் படுகாயம் – 7 பேர் பலி!

0

மும்பை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 7 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து
மும்பை கோரேகாவ் பகுதியில் ஃபிலிம் சிட்டி உள்ளது மற்றும் அங்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கோரேகாவ் பகுதியில் வசிக்கின்றனர். இந்த பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு எம்.ஜி ரோட்டிலுள்ள பவானி என்ற ஏழு மாடிக் கட்டடத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்த குடியிருப்பு பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் உயிரை காத்துகொள்ள உதவி கேட்டு கூச்சலிட்டனர். உடனே தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒருபுறம் தீயை அணைத்தனர் மற்றொருபுறம் கட்டடங்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

உயிரிழப்பு
இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கியும், புகை மண்டலத்தில் மூச்சுமுட்டியும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பெண்கள் உட்பட 40 பேர் இந்தத் தீ விபத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கூப்பர், எஃப்.பி.டி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினர், “தரை தளத்தில் கடைகளும், வாகனங்களும் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன. தரை தளத்தில் இருந்த கடையில் ஏற்பட்ட தீ, மேல் மாடிகளுக்குப் பரவியது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.