;
Athirady Tamil News

இறக்குமதி தடை நீக்கம்: காரணத்தை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு

0

பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

விசேட வர்த்தமானி
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகனங்கள் தவிர்ந்த அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.