;
Athirady Tamil News

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

0

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகள் உயிரிழந்த பின்னரா மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வு வழங்கப் போகின்றது என பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்த சிறிலங்கா அதிபர் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காது ஏமாற்றிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிறிலங்கா அரசின் பேரினவாத சக்திகளினால் தமிழர் தாயகப் பகுதியில், திட்டமிட்டு அரங்கேறி வரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக , மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை காணப்படுகின்றது.

மரணிக்கும் நிலை
இவ்வாறான சிங்கள மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேச்சல் தரையை மீட்டுத் தருமாறு கோரி பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் 26 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மேச்சல் தரை இன்றி தமது கால்நடைகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.