;
Athirady Tamil News

வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை சீர்செய்ய உடனடி நடவடிக்கை: ரணிலின் பணிப்புரை

0

வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அதிகபட்சமாகப் பயன்படுத்தி துரிதப்படுத்துமாறும் கூறியுள்ளார்.

இறுதித் தீர்மானம்
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று முதல் கல்விக்காக திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலைமையை ஆராய்ந்து அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது அதிபர்களிடமே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால், தற்போது அப்பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதால் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.