;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் கண் நோய்

0

கொழும்பில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பி இது தொடர்பில் எச்சரித்துள்ளார்.

கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் நோய்
மேலும் பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக வைக்கப்படுவார்கள் என்றும் வட்டாரக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் 6, 7 மற்றும் 8 தர மாணவர்களின் கண் நோய் காரணமாகவே அதிபர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.