;
Athirady Tamil News

வெங்காயத்தால் ஏற்பட்ட சிக்கல்: கவலையில் விவசாயிகள்

0

வெங்காயச் செய்கையில் இப்போது அறுவடை காலமாகும். சந்தைப்படுத்தலின் போது வெங்காயத்தின் விலை குறைந்து விட்டதால் நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு என்ற கருத்தும் விவசாயிகளிடையே பரவலாக இருப்பதனையும் அவதானிக்க முடிந்தது.

வெங்காயச் செயற்கையானது குறைந்த காலத்தினுள் அறுவடை செய்து சந்தைப்படுத்தக்கூடிய குறுங்காலப் பயிராகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வெங்காயச் செய்கையில் விதைப்பு
வெங்காயம் என்பது உணவை சுவையூட்ட பயன்படும் ஒரு வகை சுவைச்சரக்குப் பயிராகும். வெயில் அதிகமாகவும் மழைவீழ்ச்சி குறைவாகவும் உள்ள காலங்களுக்குப் பொருத்தமான பயிராக இருக்கின்ற போதும் பயிரிட்ட நிலம் எப்போதும் ஈரமாக இருப்பது பயிரின் வளர்ச்சியை அதிகமாக்கி விளைச்சலை அதிகமாக்கி விடும்.

நடுகைக்கான (நடுக்கைக்காய்) வெங்காயம் ஒரு அந்தர் (50kg) இருபதாயிரம் வரை சென்றது. ஒரு கிலோகிராம் நடுகைக்காய் ரூபா 400 வரை விற்பனையானது.

நிலப் பண்டுத்தல் மற்றும் நடுகைக்கூலி, மருந்து பசளை என இரண்டு ஏக்கர் வெங்காயச் செய்கைக்கு ஒன்றரை லட்சம் வரை தனக்கு செலவானதாக ஒட்டுசுட்டானில் வெங்காயத்தை பயிட்ட விவசாயியொருவர் குறிப்பிட்டிருந்தார்.

வெங்காயச் செய்கையில் பாத்திமைப்புக்கு மட்டுமே ஆண் தொழிலாளரை ஈடுபடுத்த வேண்டும். ஏனைய எல்லா வேலைகளையும் பெண் தொழிலாளர்களை கொண்டே செய்து முடிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.