;
Athirady Tamil News

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை; நபர் கைது

0

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருவளை, பரஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் அவ் வீட்டில் பணி செய்தவர் என தெரிய வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.