;
Athirady Tamil News

மூன்றாவது நாளாக தொடரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்

0

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற அலகொல்ல ,லகிலேண்ட் ,கம்பாஹா, கேகீல்ஸ் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நேற்று(12.10.2023) முதல் இவ்வாறு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழங்கப்படாத பங்கு இலாபம்
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 4 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நீண்ட காலமாக தமக்கு வழங்கப்படாத பங்கு இலாபத்தை தோட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் எதிர்வரும் (16.10.2023) ஆம் திகதி கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.