;
Athirady Tamil News

சொகுசு காரில் பயணித்த 3 இளைஞர்கள்..எதிரே வந்த லொறி மோதி பரிதாப பலி

0

தமிழக மாவட்டம் திருப்பூர் அருகே கார்-லொறி மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர்.

காரில் பயணித்த இளைஞர்கள்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், நித்திஷ், பிரேம்குமார் ஆகிய மூன்று இளைஞர்கள் சொகுசு காரில் பயணித்துள்ளனர்.

அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர். திருப்பூரின் பல்லடத்தை அடுத்த கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே கேரளாவில் இருந்து வந்த லொறி ஒன்றுடன் கார் நேருக்கு நேர் மோதியது.

சம்பவ இடத்திலேயே பலி
இதில் கார் நொறுங்கி பயங்கர விபத்திற்குள்ளானது. காரில் பயணித்த மூன்று இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் பலியான இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பாண்டியன் என்ற சாரதி இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு பயணித்தபோது, அவர் ஓட்டி வந்த லொறி கார் மீது மோதியது தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.