;
Athirady Tamil News

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

0

டயனா கமகேவின் குற்றச்சாட்டு
தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவே அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை உடனடியாக ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

சுஜித் பெரேரா மறுப்பு
இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை தான் தாக்கவில்லையென்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்று முன் உரையாற்றிய அவர் , இராஜாங்க அமைச்சர் டயானா அநாகரீகமாக நடந்துகொள்ள முற்பட்டதாக சாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.