;
Athirady Tamil News

வங்காள வரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம்

0

வளிமண்டல திணைக்களமானது முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், இன்று(20) காலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில்,

பலத்த காற்று
“மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒக்டோபர் 23ஆம் திகதியன்று வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.