;
Athirady Tamil News

சடுதியாக குறைவடைந்துள்ள மீன்களின் விலை

0

கடந்த காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட சந்தையின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு
இதேவேளை, சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மரக்கறிகளின் விலைகள் சடுதியாக மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கனமழை காரணமாக விலை உயர்வடைந்துள்ளதாக மனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.